இரண்டாம் உலகம் படத்தை(தோல்வி ) தொடர்ந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் செல்வராகவன் ,சிம்பு நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை இந்நிலையில்,இன்று மாலை செல்வராகவன்,சிம்பு ஆகியோர் தாங்கள் இணையவுள்ள புதிய படம் குறித்து தனித்தனியாக டிவிட்டரில் செய்தி வெளியி ட்டுள்ளனர் .இச் செய்தியில்,செல்வராகவன் கூறியி ருப்பதாவது, இதை அறிவிப்பதில் மிகவு ம் மகிழ்ச்சியடைகிறேன் .எனது அடுத்த படம் சிம்புவுடன் தான்.இப்படம் உண்மையிலேயே எல்லோரும் மிகவும் விரும்பும் வகையில் இருக்கும்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.என்று கூறியுள்ளார். இது குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது,என் அண்ணா செல்வராகவன்,என் தம்பி சிம்பு இருவரும் சேர்ந்துள்ளனர் .இக்கூட்டணி வெற்றியடைய வாழ்த்துகிறேன் . சிம்பு ,செல்வராகவினிடம் இருந்து கத்துக்க ரெடியா இருங்க ! என்கிறார்.