தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர்இசை மாமேதை ’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ்.திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப்பாடல்களாலும் நம்மை எல்லாம்வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில்ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசைவேள்வியையே நடத்திக்காட்டியிருக்கிறார்.
சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநிலஅரசுகளின்விருதுகளை 43 முறையும்வென்றவர். போகாத நாடில்லை, பாடாத
மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனைசரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு அள்ள அள்ளக் குறையாத
இசைப்புதையலாய்விளங்குகிறது.இத்தகைய ஈடு இணையற்ற மகத்தான பாடகர் ஐந்து சகாப்தங்களைநிறைவு செய்து தனது இசைப்பயணத்தை இன்றளவும் இனிதே தொடர்ந்துகொண்டிருப்பதை கவுரவிக்கும் வகையிலும், அவரது 75 -வது பிறந்தநாள்விழா வை ஒரு இசைத்திருவிழாவாகவே போற்றிக் கொண்டாடவும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ்ஈவண்ட்ஸ்இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். வரும் ஜனவரி 25ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளஇந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் ,இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவரும் திரண்டுவந்து தங்களின்அபிமான பாடகரைப்போற்றி கவுரவிக்க உள்ளனர்.6 மணி நேரத்துக்கும்மேலாகநடக்கவுள்ள இசை நிகழ்ச்சியில், .யேசுதாஸ்அவர்களின் காலத்தால் அழியாத இன்னிசை கீதங்கள் இசைக்கப்படவுள்ளன.சங்கீத சங்கமமாய் அமையும்இந்நிகழ்வில் பல்வேறு இசையமைப்பாளர்களும், பின்னணிப்பாடகர்களும், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும் இசைத்துப்பாடி கண்களுக்கும்காதுகளுக்கும்விருந்தளிக்க உள்ளனர். லட்சுமன் ஸ்ருதி இசைக்குழுவினர் இசையமைக்க வுள்ளனர்.