இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது, தட்பம் தவிர்!
ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த காட்சிகளோடு இப்படம் செல்லுமாம். இப்படத்தை ஜெகன் நாராயணன் இயக்கியிருக்கிறார் .
இவர் தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘பரதேசி’ ,’நான் சிவனாகிறேன்’ படங்களில் நடித்த கார்த்திக் அசோகன் நாயகனாக பிரதான வேடம் ஏற்றிருக்கிறார் .நாயகியாக மும்பை மாடல் பாயல் நடித்திருக்கிறார். மற்றும் புதுமுகங்கள் ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள். ௹ல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் , தியா சினி கிரியேஷன், மேஜிக் லேண்டர்ன் புரொடக்ஷன் என்று மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு வசந்த், இசை – பிரசன்னா சிவராமன், பாடல்கள் கவிஞர் வி.ஜே.பி, கலை – பிரசாத்.எடிட்டிங் அர்ஜுன்.
முழுக்க முழுக்க கோவா காடுகளில் உருவாகியுள்ள இப்படம் , பார்ப்பவர்களைப் புதிய பின்புலத்தில் மகிழவைக்கும். ( அப்படியா ,அது எப்படி தம்பி ,புதிய பின்புலம்?)
காட்டுக்குள் தேன் நிலவுக்கு செல்லும் காதல் ஜோடி சில தீய சக்திகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? எப்படி தப்பித்தார்கள்? என்பதை மிரட்டலாக சொல்லும் கதை. ( இப்படித்தான்யா எல்லோருமே சொல்றாங்க.)