தற்போதைய டிவிட்டர் சண்டைகளில் இயக்குநர் பா.ரஞ்சித் தலை அதிகமாவே உருளுகிறது.
காட்மேன் வெப் சீரியலின் டீசர் வந்த பிறகு மதம் சாதி சார்ந்த சண்டைகள் அதிகமாய் இருக்கின்றன. அந்த சீரியலில் பிராமண சமூகத்தை இழிவுபடுத்துகிற வசனங்கள் இருப்பதாக சொல்லி பாஜக ,இந்துத்துவா அமைப்புகளை சார்ந்தவர்கள் போலீசில் புகார் செய்திருந்தனர்.
காஞ்சி மடத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் சுவாமி வழியாக நடவடிக்கை எடுக்க வைத்தனர். இதனால் வெப் சீரியல் தொடர்பானவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்திருந்தது. ஆனால் அவர்கள் முதல் கட்ட விசாரணைக்கு வரவில்லை.
இதனால் போலீஸ் அவர்களை கடுமையாக எச்சரித்திருந்தது.
இந்த வெப் சீரியல் தொடர்பாக திரை உலகப் பிரமுகர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதுகிற நிலை வருமோ என்கிற அச்சம் வந்திருக்கிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய டிவிட்டர் கணக்கில் அவரது கருத்தைப்பதிவு செய்திருக்கிறார் .
“தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர்&நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வன்மையான கண்டனங்கள்!! இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய @ZEE5Indiaநிறுவனத்தாரின் இச்செயல் ஏற்புடையது அல்ல!!!மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க!!” என எழுதியிருக்கிறார் .
இதை கண்டித்து அதிக அளவில் எதிர்ப்பும்,ஆபாசமான கருத்துகளையும் சிலர் பதிவுசெய்திருக்கிறார்கள்.
திரைப்படத் தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே .கோபி மிகவும் கடுமையுடன் ரஞ்சித்துக்கு பதிவிட்டிருக்கிறார்.இதனால் திரை உலகத்தில் இருப்பவர்கள் இரு பிரிவாக பிரிகிற அபாயம் இருக்கிறது.தமிழ்ச்சினிமாவில் கோஷ்டிகளுக்கு பஞ்சமே இல்லை. தற்போது இது தலை போகிற பிரச்னை.!