திரிஷா ..37 வயதைக் கடந்தாலும் இன்று வரை நாயகியாகவே நடித்து வருகிறவர். திரை உலகில் 18 ஆண்டுகள் .இவரை வழி நடத்துகிறவர் அம்மாதான்.!
காதல் செய்திகளில் பல விதங்களில் பதிவானவர் இவராகத்தான் இருக்கும் .திருமண மேடை வரை சென்று திருமதியாகாமல் செல்வியாக திரும்பியவர் .
இவரது கன்னி வாழ்க்கை முடிவடையுமா ,இல்லற வாழ்க்கை முகிழ்க்குமா என்பது திரிஷாவுக்கும் அவரது அம்மாவுக்கு மட்டுமே தெரியும்.!
உடலில் பல இடங்களில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். பூலோகம் படத்துக்காக ஜெயம்ரவியின் படத்தை தனது தொடை ,புஜங்களில் தற்காலிகமாக பச்சை குத்திக் கொண்டிருந்தார்.
அண்மையில் தனது ரசிகர்களுடன் இணையதளம் வழியாக உரையாடியவர் சில செய்திகளை வெளியிட்டிருக்கிறார்.
“இந்தியாவில் சிறந்த 3 நடிகர்கள் யார் என்று சொல்ல முடியுமா “என்கிற கேள்விக்கு எந்த வித தயக்கமும் இல்லாமல் பதில் சொல்லியிருக்கிறார்.
“கமல்ஹாசன் ,மோகன்லால் ,ஆமீர்கான்” என வரிசைப்படுத்தி சொல்லியிருக்கிறார்.
துணிச்சலான பதில்தான்.!
“கொரானா முடக்கம் முடிந்த பிறகு என்ன செய்யப்போகிறீர்கள்?”
“வேறென்ன ரெடி ஃ பார் டேக் ஆப்..வெளிநாடு பறக்க தயாராக இருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.