நாளை மறுநாள்வரும் மே 3ம் தேதியுடன் நாடு முழுவதும் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு வரும் மே, 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நடிகரும் மக்கள்நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
“உயிர் பயம் ஊரை அடக்கலாம் ;
பாழும் கிருமி உமக்கும் வணங்காது எவருக்கும் அடங்காது .
எரிமலைக் குழம்பை தண்ணீர் தணிக்குமா ?
இவ்வுலகை இன்று சூழ்ந்துள்ள தீப் பிழம்பு நம்மை விழுங்கும் முன் , மக்கள் அனைவரும் எண்ணம் கோர்த்து செயல்பட வேண்டும் .
யார் ஓதுவது எந்த வேதம் என கிருமிக்கும் தெரியாது . நமக்கும் தெரிய வேண்டாம் .
நம்மைக் காக்க நாமே வேலி … மதமற்ற மார்க்கம் சாரா வேலி .
கை கோர்ப்போம் எண்ணம் கோர்ப்போம் .
கட்டளையிட்டல்ல … இதை வேண்டுகோளாய் ஏற்று அன்பு வளர்க்க…..
ஊரடங்கும் உயிருக்கு பயந்து
– பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர்.
தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது.
நீர், போதாதிதற்குயாமும் வேண்டும்.
மக்களைக் காக்க மக்களே மருந்து.
மனம் மாறு, அரசே மதம் மாறவல்ல எம் கட்டளை
மனிதனை நேசிக்க வேண்டுகோள்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஊரடங்கும் உயிருக்கு பயந்து – பிணி
உமக்கடங்காது புரிந்து கொள்வீர்.
தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது.
நீர், போதாதிதற்குயாமும் வேண்டும்.
மக்களைக் காக்க மக்களே மருந்து.
மனம் மாறு, அரசே
மதம் மாறவல்ல
எம் கட்டளை
மனிதனை நேசிக்க வேண்டுகோள்மக்கள் நீதி மய்யம்
— Kamal Haasan (@ikamalhaasan) May 1, 2020