கொரானாவைரஸ் பேரபாயம் தொடர்பாக தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மால்கள் எல்லாமே மூடப்பட்டுள்ளன. அரசின் ஆலோசனைப்படி பெப்சி படப்பிடிப்புத் தொழிலார்கள் அமைப்பும் முடிவெடுத்திருந்தது. தலைவர் செல்வமணி படப்பிடிப்பு நடக்காது என அறிவித்திருந்தார்.
ஆனால் விக்னேஷ்சிவன் தயாரிக்கிற நெற்றிக்கண் படப்பிடிப்பு இன்றும் ( 19 ஆம் தேதி.) நடந்தது. இயக்குநர் மிலிந்த் ராவின் பிறந்த நாளை கொண்டாடிய படங்களை அவர்களே வெளியிட்டிருக்கிறார்கள்..
இந்த படத்தில் நயன்தாராவுக்கு முக்கியமான போலீஸ் வேடம்.இசை அமைத்திருப்பவர் கிரிஷ் .கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு.