இதுவரை டிவிட்டர் வழியாக மோதிய சின்மயி தற்போது நேரடியாக களத்தில் குதித்திருக்கிறார்.
டப்பிங் யூனியன் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ராதாரவியை எதிர்த்து தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிடுகிறார்.
முதலில் இந்த வேட்பு மனு செல்லுமா செல்லாதா என்பது நாளைக்கு தெரிந்து விடும். சின்மயி ஆயுட்கால உறுப்பினர் இல்லை என்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது ,பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது. வழக்கு மன்றத்திலும் பிரச்னை இருக்கிறது.
இது தொடர்பாக ராதா ரவி அணியினரிடம் பேசியபோது “அண்ணன் (ராதாரவி ) இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் இல்லை. போட்டியிட்டால் எலக்ஷன் நடக்கும் அண்ணன் ஜெயிப்பார்.யாரும் நிக்கலேன்னா தேர்தல் இல்லை. அவர் ஒருமனதா தலைவர் ஆகிடுவார். எலக்சன்னா போட்டி வரத்தான் செய்யும். அவருக்கு தலைவர் ஆகிற தகுதி இருக்கு. எவ்வளவோ சாதனைகளை செய்திருக்கார்.” என்று கூறினார்கள்.
நாளை வரை வெயிட் பண்ணி பார்க்கலாமே !