“தாமதமாக கவுரவித்திருந்தாலும் சரியானவருக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள்” என்று ரஜினியைப் பாராட்டினார்.
இன்று காலை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை ,அனந்து படம் திறப்பு விழாக்கள் அமர்க்களமாய் நடந்தது,
இதில் கமல்ஹாசன் தனது நண்பர் ரஜினி பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
“ஒரு கட்டத்தில் ரஜினி இந்த திரை உலகை விட்டுப் போவதாக சொன்னபோது பதறிவிட்டேன்.நீங்கள் போவதாக இருந்தால் என்னையும் போகச் சொல்வார்கள்.ரெண்டு கோல் போஸ்ட் இருந்தால்தான் நடுவில மேட்ச் விளையாட முடியும்.எதிர்காலம் தயாராக இருக்கிறது என்று சொன்னேன்.நாங்கள் வேப்ப மரத்தடியில் பேசிக்கொண்டதை யாராவது ஒட்டுக்கேட்டிருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பார்கள் “என்று சொன்ன கமல்ஹாசன் தந்து மகள்கள் சுருதிஹாசன் ,அக்ஸ்ரா ஹாசன் இருவரையும் இரட்டைக்குழல் துப்பாக்கி என சிறப்பித்துக் கூறினார்.