முன்னொரு காலத்தில் பாண்டியாக்,பியூக்,செவர்லே போன்ற பெரிய கார்கள் பெருந்தனக்காரர்களிடம் மட்டுமே இருந்தது. அத்தனையும் விலை உயர்ந்த கார்கள்.
மதுரைக்கு வருகிற பெரிய தலைவர்கள் அதாவது ராஜாஜி ,காமராஜர் ,நேரு ,போன்ற தலைவர்களுக்காகவே டி .வி.எஸ்.நிறுவனம் ஒரு செவர்லே கார் வைத்திருந்தது.
சென்னையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது விலை உயர்ந்த காரில் வைக்கோலை ஏற்றிக் கொண்டு போனதாக சொல்லுவார்கள்.
ஆனால் தற்காலத்தில் எத்தனையோ கார்கள் வந்திருந்தாலும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மட்டும் தனி மதிப்பு.அதெற்கென தனி மரியாதை இருந்து வருகிறது. இந்த காரை எவரும் வாங்கி விடமுடியாது. அந்தஸ்து,சமூகத்தில் இருக்கிற மரியாதை,பணம் இவைகளை அலசி ஆராய்ந்து விட்டுத்தான் காரை அந்த நிறுவனம் விற்கும்.
தமிழ்ச் சினிமாவில் இயக்குநர் ஷங்கர், நடிகர் விஜய், தனுஷ்,தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் அகோரம் பிரதர்ஸ்,இவர்களிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கிறது.
தற்போது அந்த வரிசையில் நடிகை ஹன்சிகா மோத்வானி சேர்ந்திருக்கிறார். இந்த காருக்கு பெட்ரோல் போடுவதற்கே தனியாக பல லட்சங்கள் ஒதுக்க வேண்டும். தனுஷ் இந்த காரை எடுத்துக் கொண்டு போனபோது எங்கேயோ உரசிவிட்டார். அன்றிலிருந்து காரை வெளியில் எடுப்பதில்லை. ஆசைக்கு இரவில் ஒரு சுற்று . இது ஒரு கவுரவத்துக்கான கார்.
ஹன்சிகாவின் அம்மா டாக்டர் மோனா தனது மகளுக்காக 12 கோடி ரூபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி மக்களுக்கு தீபாவளி பரிசாக கொடுத்திருக்கிறார். நயன்தாராவிடம் இல்லாத கார் இது ஒன்றுதான்.இனி கல்யாணப்பரிசாக விக்னேஷ் சிவன் வாங்கிக் கொடுக்கலாம்.
ஹன்சிகாவின் கையில் மகா,பார்ட்னர்,கல்யாண் இயக்கத்தில் ஒரு படம் என மூன்று படங்கள் மட்டுமே இருக்கிறது.