சும்மா சொல்லக்கூடாது.
கடந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வெச்சு செய்தது இந்திய கிரிக்கெட் அணி.
லீக் சுற்றிலிருந்து பாக்.அணி வெளியேற்றப்பட்டது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு எவ்வித பொறுப்பையும் பாக்.கிரிக்கெட் வாரியம் கொடுக்கவில்லை.
டெஸ்ட் கேப்டன் பதவி அசார் அலிக்கு.!
டி.20கேப்டன் பதவி பாபர் அசாமுக்கு.!
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திலும் அண்ணன் சர்ப்ராஸ் அகமது இல்லை. இப்படி அண்ணனுக்கு தொடர் தோல்வி .
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து சர்ப்ராஸ் ஓய்வு பெறுவாரா என செய்தியாளர்கள் அவரது மனைவி குஷ்பக்த் ஷா விடம் கேட்டார்கள்.
இதற்கு பதில் “எதற்காக அவர் ஓய்வு பெற வேண்டும் ?” என்கிற ரீதியில் பதில் சொல்லியிருக்க வேண்டும்
அதை விடுத்து இந்திய வீரர் எம்.எஸ்.தோனியை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
“தோனியே இன்னமும் ரிட்டையர் ஆகல. ஏன் என் புருசன் ஓய்வு பெறனும்?”என பதில் சொல்லியிருக்கிறார்.
டிவிட்டரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாக் .வீரரின்மனைவி குஷ்பக்த் ஷாவுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.