தமிழ்ச்சினிமாவில் பரபரப்புக்கா பஞ்சம் ?அதுவும் இளையவேள் ராதாரவி இருக்கிறபோது!
“பத்த வச்சிட்டியே பரட்டை ” என்று பட்டைய கிளப்புகிற அதிமுக அரசியல்வாதி.!
நயன்தாராவை பத்தி விமர்சித்தார் என்பதற்காக திமுக இவருக்கு கட்டம் கட்டியது.
“அதனாலென்னா நாங்க இருக்கம்ல ..வாங்கப்பு “என்று அதிமுக அரவணைத்துக் கொண்டது. இங்க இவரை மாதிரி செல்வாக்குள்ள பேச்சாளர்கள் இல்ல.ஆளும் கட்சி வேற.நாளைக்கு சீட்டுக் கொடுத்தாலும் கொடுப்பாய்ங்க.
இப்ப ஒரு விழாவில் விவகாரத்தை கிளப்பியிருக்கிறார்.
“தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் அதிகம். அவர்கள் ஆதரவு இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலைதான் இருக்கிறது. பல தொகுதிகளில் அவர்கள்தான் நிற்கிறார்கள்.தமிழ்ச்சினிமாவிலும் தெலுங்கர்கள் அதிகம். நான் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன் ‘நான் தெலுங்கன்” என பேசி இருக்கிறார்.
பட்டைய கெளப்புங்க நைனா !