எமகாதகர்களாக இருக்கிறவர்கள்தான் அரசியல்வாதிகள்.
உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு குடைச்சல் கொடுக்காவிட்டால் பிரபலம் ஆக முடியாது என்பது அரசியல் அரிச்சுவடி .
அதை நன்றாகவே பயன்படுத்துகிறது தேமுதிக.
இன்றுவரை அதிமுக கூட்டணியில் இருக்கிறது கேப்டனின் கட்சி. இருந்தும் பாராளுமன்றத் தொகுதிகளில் பாச்சா பலிக்கவில்லை.இடைத்தேர்தல்களிலும் ஏமாற்றம்தான்.
இந்த நிலையில் வரவிருக்கிற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார்.
இந்த பயமுறுத்தல் எதற்காக என்பது தெரியவில்லை.