கதை,இயக்கம் :சுஜீத், ஒளிப்பதிவு.: மதிவாணன் ராஜூ, பின்னணி இசை.: ஜிப்ரான்
பிரபாஷ்,ஷ்ராத்தாகபூர், அருண் விஜய் , ஜாக்கி ஜெராப் ,மந்திரா பேடி,சங்கி பாண்டே,
**************
“ஒரு ஆளு வில்லனா இருந்தா பரவாயில்ல. தடித்தடியா பயில்வான்க மாதிரி பெரிய கேங்கே இருக்கு அங்கே!.. நம்பிப் போய் உக்காந்தோம். முட்டுச்சந்தில விட்டு அப்பாவிய நொங்கி எடுத்த மாதிரி சாத்துனாங்க..பாரு! மூணு மணி நேரம். நொறுங்கிப் போயிட்டோம்! எப்படிங்க நம்ம டைரக்டர் ஹரிய விட பல மடங்கு பெரிய ஆளுங்க ஆந்திராவ்ல இருக்க முடியிது! ? சும்மா ஏர்ல பாரீன் கார்கள பறக்க விட்டிருக்காங்க … இதுல இனி அவங்கள அடிச்சுக்கவே முடியாது.அடிச்சுக்கவே முடியாது.”
பாகுபலிக்கு அடுத்து பிரமாண்டமான செலவு 320 கோடியில சாஹோ படம் ! பிரபாஷ் தான் ஹீரோ. ஷ்ராத்தாகபூர் ஹீரோயின். அருண் விஜய் கெட்டவர் மாதிரி தெரியும்.ஆனா நல்லவர்.
செலவு செஞ்ச அளவுக்கு கதை இல்ல.
உலகத்தில இருக்கிற ஒட்டு மொத்த ‘கேங்க்ஸ்’களுக்கு ராய் தான் லீடர். அதாவது ஜாக்கி ஜெராப். வெளிநாட்டில் இருந்து மும்பை வந்து இறங்கிய அவரை போட்டி கும்பல் கொன்று விட கொண்டு வந்த பல லட்சம் கோடி பணமும் எரிந்து நாசம் ஆகிறது.
ஆனால் பணம் இருக்கிறது.அதன் ரகசியம் ஒரு ப்ளாக் பாக்ஸில் இருக்கிறது என்பது தெரிய வர அண்டர் கவர் போலீஸ் அதிகாரி என அறிமுகமாகிற பிரபாஷ், ஒரு புறமும் எதிரி கோஷ்டி இன்னொரு புறமும் பாக்ஸை தேட அதகளம் ஆரம்பிக்கிறது.
பிரமாண்டம் இருக்கிறதே தவிர,விறு விறுப்பான திரைக் கதை இல்ல. பிரபாஷிடமும் அவ்வளவாக எதிர்பார்க்க முடியவில்லை. எப்படா இன்டர்வெல் வரும்னு எதிர்பார்க்க வேண்டியதாக இருக்கு.
அருண் விஜயின் என்ட்ரி இருந்த அளவுக்கு அவரது கேரக்டர் வலுவற்று இருக்கு.
ப்ளஸ் பாயிண்ட்ஸ் னா கேமரா, மதிவாணன். மற்றும் வி.எப்.எக்ஸ் பார்ட்டிங்க. இவங்க பின்னி இருக்காங்க.
சாண்டியாகோ ரேஞ்சுக்கு தகுந்த பின்னணி இல்ல. நெருப்புக் கோழி,மலைப்பாம்பு,கருஞ் சிறுத்தைன்னு சும்மா பிலிம் காட்டி இருக்காங்க.
ஹீரோயின் ஷ்ரத்தா கபூர் ஒட்டல.
இயக்குநர் சுஜீத்தின் ஆசை பாகுபலி ரேஞ்சுக்கு இருந்தாலும் பலன் என்னவோ அந்த அளவுக்கு இல்லாமப் போயிருக்கு!
சினிமா முரசத்தின் மார்க் 2 / 5