ஆளுகிற கட்சியை எந்த அமைப்பு எதிர்த்தாலும் மகனே நீ உத்திரத்தில தலை கீழா தொங்கினாலும் சொட்டுத் தண்ணி கிடையாதுடா!
1967-க்குப் பிறகு நீதி தேவதை எங்கேயோ போய் மறைஞ்சிட்டாய்யா.ஏதோ அப்பப்ப தலை காட்டுறா. அதனால ஜனநாயக நாட்டில அந்தம்மாவை நினைச்சிக்கிட்டு ஆளுகிற கட்சிய பகைச்சிக்கக் கூடாது.
சுப்ரீம்கோர்ட் வரை போவோம்னு கர்ஜித்தவர்களை நெஜமாவே போக வைத்து விடுவார்கள் போலிருக்கு.!
நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிஞ்சி மாசக்கணக்கில் ஆயிடுச்சு. இன்னும் முடிவு தெரில.
எப்பதான் தெரியுமாம்?
இப்பத்தான் நீதிபதி ஆதிகேசவலு சார் தலைமை நீதிபதிக்கு சிபாரிசு பண்ணிருக்கிறார். மாறுபட்ட தீர்ப்புகள் வராம தடுக்க சங்கம் தொடர்பான எலக்சன் வழக்குகளை ஒரே நீதிபதிய வெச்சு விசாரிக்க சிபாரிசு பண்ணுங்கன்னு சொல்லிருக்கிறார்.
அவர் யாரை சொல்வாரோ, ?
ஆக மொத்தம் இந்த வருசத்துக்குள்ள முடிஞ்சிடும்ல?