கடும் வறட்சி நிலவும் காலங்களில் கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வு கொடுப்பதற்காக 10௦ நாள் வேலை வாய்ப்புத் திட்டம் அமல்படுத்துவது மாதிரி….
சினிமாவில் வாய்ப்பு இல்லாதவர்களுக்காக நடக்கும் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்தான் பிக்பாஸ்.
காடு கரையில் மம்பட்டி எடுத்து வெட்டுவது மாதிரி ..இதில் வம்பு,தும்பு பண்ணனும் ,பாவ்லா காட்டனும், அழுவனும், இப்படி பல வேலைகள்..
வனிதாவை பற்றி புதுசா ஒன்னும் சொல்றதுக்கில்ல. இவருடைய இரண்டாவது புருசன் தெலுங்கானாவில் ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்காராம்.
“என் மகளை கடத்திட்டு வந்திட்டார்னு.”
இப்ப போலீஸ்காரங்க சென்னைக்கு வந்திருப்பதாக சொல்றாங்க.
மீரா மிதுன் மேல பண விவகாரம் தொடர்பாக ஒரு புகார் இருக்கு. அதை விசாரிக்கும் கடமை போலீசுக்கு.
ஆக இந்த இரண்டு பேரையும் விசாரிப்பதற்கு போலீஸ் பிக் பாஸ் கூடாரத்துக்குள்ள நுழையலாம்.