கதை, வசனம் ,இயக்கம்: எல்.சுரேஷ், இசை: ஷபிர், ஒளிப்பதிவு: ராஜவேல் மோகன் ,பைனல் மிக்சிங் :டி.உதயகுமார்.
ஜெய்,கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி,வரலட்சுமி சரத்குமார்,
******************************
ஒவ்வொரு தயாரிப்பாளரின் தேசிய அழுகையாகிவிட்ட தமிழ் ராக்கர்சை இயக்குநர் எல்.சுரேஷும் பாடித்தான் ஷோவை ஆரம்பித்தார்கள்.
ஒரு தொழில் நசிவதைப் பற்றி தயாரிப்பாளர் சங்கம்,தமிழக அரசாங்கம்,தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரங்கள் ஆகிய யாருமே கவலைப்படாதபோது….
இந்த எல்.சுரேஷின் அழுகுரலால் யாது பயன்?
சரி படத்தைப் பற்றிப் பார்ப்போம்.
ஒரிஜினல் நீயாவின் அந்த மயக்கும் இசையான ‘ஒரே ஜீவன்,’என்கிற பாடலும் ,அந்த பாடலுக்கு ஆடிய ஸ்ரீ பிரியாவின் நளினமும்,அழகான கவர்ச்சியும்…
நினைவுக்கு வராமல் இல்லை.!
ஒரிஜினல் படத்தைப் பார்க்காத 2000-ம் ஆண்டு ரசிகர்களுக்கு படத்தின் டைட்டில் வாத்திய இசை வசீகரிக்கவே செய்யும்.!
லாஜிக் பார்க்கக்கூடாத இச்சாதாரி பாம்புகளைப் பற்றிய கதை. இச்சாதாரி பாம்புகளே பக்கா கற்பனைதான். இதனால் கதாசிரியர்களின் கதையில் சொட்டை,நொட்டை காண்பது வெட்டி வேலை.! கேத்தரின்,ராய் லட்சுமி இருவருமே ஜெய்யின் காதலிகள்.இவர்களில் யார் ஜெய்யை மனம் செய்கிறார்கள் என்பது ஒன் லைனர்!
காட்சிகள் கவரும் வகையில் இருக்கிறதா,திரைக்கதை ரசிக்கும்படி அமைந்திருக்கிறதா,நடிக நடிகையரின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கிறது?
வாயில்லா ஜீவன்களுக்கு வலிக்கக்கூடாது என காருண்யமிக்க மேனகா காந்தி போட்டிருக்கும் உத்திரவு காரணமாக வரையப்பட்ட பாம்புகள் பரவாயில்லாமல் படம் மட்டும் எடுத்திருக்கின்றன.பைனல் மிக்சிங் பண்ணிய உதயகுமாருக்குப் பாராட்டுகள்.
ஒளிப்பதிவாளர் ராஜவேல் மோகன் சிரமத்தைப் பார்க்காமல் கேமராவை சுமந்தபடி மலைகளில் விழுந்து அருவிகளில் நனைந்து …நல்லாவே இருக்கு ! இவராவது சொல்லி இருக்கலாம் கொடைக்கானல் காமடி காட்சிகள் வேஸ்ட் என்பதை! எரிச்சல்! இன்னொன்று காமம் சொட்டும் பாடலுக்கு நடனமும் சரியில்லை.ஜெய்-ராய் லட்சுமியின் கெமிஸ்ட்ரியும் ஒத்துப்போகவில்லை.
ஜெய்க்கு இரட்டை விருந்து கேத்தரின்,ராய் லட்சுமி. மூவருமே கதையை நகர்த்தி செல்ல பயன் பட்டிருக்கிறார்கள். பின்புலத்தின் ரிச்னஸ்க்கு ஏற்ப காட்சிகள் அமையவில்லை. வரலட்சுமி சரத்குமார் தேவையா அந்த காட்சிக்கு! டான்ஸிலும் உயிர் இல்லை.மாஸ்டர் யாரோ!
சினிமா முரசத்தின் மார்க் 1.5 / 5