பிரபுதேவா …
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படுகிறவர். திரை உலகில் சிறந்த டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவர் என அழைக்கப்பட்ட சுந்தரம் மாஸ்டரின் மகன்களில் ஒருவர் பிரபு தேவா.
இவர் ரமலத் என்ற டான்சரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ரமலத்தும் இந்துவானார்.
இவர்களுக்கு 3 பிள்ளைகள். அதில் மூத்த பையனுக்கு கேன்சர்.சிறு வயதிலேயே இறந்து விட்டான். மற்ற இரண்டு பிள்ளைகளும் அம்மாவுடன் இருந்தார்கள்.
நயன்தாரா-பிரபுதேவா காதல் மலர்ந்தது.இருவரும் லிவ்-இன்-ரிலேஷனில் கணவன்-மனைவி போல வாழ்ந்தார்கள். இதை ரமலத் என்கிற லதா பலவித போராட்டங்களை நடத்தினார். பெண்ணிய அமைப்புகளும் சார்ந்து நின்றன.
கோர்ட்டு வழியாக மனைவியைப் பிரிந்தார் பிரபு தேவா.
பிரபுவின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு பிரபுவை காதலித்தவர்தான் நயன்.
என் பிள்ளைகள் pic.twitter.com/0Ze1sAxh7w
— Prabhudheva (@PDdancing) March 4, 2019
கல்யாணம் நடந்த பின்னர் பிள்ளைகளை பிரியவேண்டும் என்கிற நயனின் கண்டிசன் பிரபுவுக்கு பிடிக்கவில்லை. பிள்ளைகள் மீது அவ்வளவு பாசம்.
மகன்களுக்காக காதலை தியாகம் செய்தார்.
மும்பையில் பிசியாக இந்திப்படங்களை இயக்கி வந்த காலத்திலும் பிள்ளைகளை மும்பைக்கு வரவழைத்து விடுமுறையை கழித்தவர்.
அவரது இரண்டு பையன்களும் இன்று வளர்ந்து நிற்கிறார்கள்.
“எனது வாழ்க்கையில் இன்னொரு பெண்ணுக்கு இடம் இல்லை”என அழுத்தம் திருத்தமுடன் சொன்னவர் இன்று வரை அப்படியேதான் வாழ்ந்து வருகிறார்.