வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க!
-திரைவிமர்சனம்
Production: The Show People
Cast: Arya, Santhanam
Direction: Rajesh
Screenplay: Rajesh
Story: Rajesh
Music: D Imman
Cinematography: Nirav Shah
Dialogues: Rajesh
Editing: Vivek Harshan
Rating -2/5
மதுவுக்கு எதிராக நாடே கொடித்தூக்கி போராடிக் கொண்டிருக்க…கூசாமல் திரை வழியே படம்
பார்ப்பவர்களுக்கு ஊற்றி கொடுக்கும் வேலையை பார்த்துள்ளார் உலக மகா இயக்குனர்
ராஜேஷ். சரி, வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க,ஸாரி! படிச்சவங்க படத்தை பற்றி பார்ப்போம்.
இப்படியே வெட்டியா ஊர் சுத்திகிட்டு திரிஞ்சா எப்படி? பொறுப்பா ஒரு கல்யாணம் பண்ண
வேணாமா? என வீட்டில் சந்தானத்திற்கு பெண் பார்க்கிறார்கள். அவர்தான் பானு! உயிர் நண்பன்
ஆர்யாவை விட்டு பானுவை இன்டர்வியூ பண்ண வைக்கிறார் சந்தானம்.. பொண்ணு ஓ.கே.!
ஆனால், கல்யாணத்தில் ஆரம்பிக்கிறது கலவரம். நண்பன் சந்தானத்தை கலாய்ப்பதாக
நினைத்துக் கொண்டு ஆர்யா செய்யும் குறும்புகள், பானுவுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்த,
முதலிரவே பத்து நாளைக்கு தள்ளிப் போகிறது. ‘அதுக்குள்ள உன் பிரண்ட்ஷிப்பை கட்
பண்ணிட்டு வா. அப்பதான் என் முந்தானைக்குள் உனக்கு இடம்’ என்கிறார் பானு.
நண்பனுக்கும் ஒரு பெண்ணை பார்த்து தள்ளிவிட்டுவிட்டு பானுவை அடைய வேண்டும் என்கிற
லட்சிய புருஷராக களமிறங்கும் சந்தானம், ஆர்யா- தமன்னாவை கோர்த்துவிடுகிறார். இவர்கள்
அத்தனை பேருக்கும் நடுவில் நடக்கும் அசால்ட், ரியாக்ட், டகால்ட், டுகால்ட்டுகள்தான் படம்.
இறுதியில் ஆர்யா தமன்னாவை கைப்பிடித்தாரா? சந்தானத்தின் முதலிரவு சந்தோஷமாக
நடந்தேறியதா? என்பதே இப்படத்தின் [க்ளைமாக்ஸ்! ராஜேசின் முந்தைய படங்களின் இன்னொரு ஜெராக்ஸ் தான் இப்படமும்.
சந்தானத்திற்கு காமெடி சரக்கு சுத்தமாக தீர்ந்துவிட்டது.முந்தைய படங்களில் பேசிய மொக்கை
டயலாக்குகளை திரும்பவும் இந்த படத்தில் பயன்படுத்தியிருப்பது சிரிப்பு
வரவில்லை,எரிச்சல்தான் வருகிறது.சரக்கு,கலாய்க்கிறது,இப்படி வார்த்தைகள் திரும்ப திரும்ப
வந்துக்கொண்டே இருக்கின்றன.டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்!
சாராயம் குடிப்பதை ஏதோ சர்பத் குடிப்பது போன்று ஆர்யாவும்,சந்தானமும் சதா சர்வகாலமும் செய்து
கொண்டே இருக்கிறார்கள். கூடவே தமன்னாவும் பீர் குடிப்பதாக காட்டுகிறார்கள். தியேட்டரில் படம் பார்த்தவர்களில் முக்கால் வாசி பேர், 15வயதிலிருந்து 20 வயதிற்கு உட்பட்டவர்கள்.தான்! படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் ,மச்சான்,.படம் முடிந்ததும் மொத வேலையா
தண்ணீ அடிக்கணும்டா ! என்று அவர்கள் பேசிக் கொண்டது நம் காதுகளில் தெளிவாகவே விழுந்தது!
ஒரு இளைய சமுதாயத்தை கெடுத்த பாவத்தில் இப்பட இயக்குனருக்கும் பங்கு உண்டு.இது
ஆர்யாவின் சொந்தப் படம் வேறு.
என் படத்தில் குடிக்கிற காட்சிதான் இருக்குமே தவிர புகைக்கிற காட்சி இருக்காது என்று
பெருமை பேசுகிறார் ராஜேஷ்.(அட கொடுமையே!)
உலக திரைப்படவிழாக்களில் காக்கா முட்டை,கோலி சோடா…போன்ற பட ங்கள் கோலேச்சும் காலகட்டத்தில்
வி எஸ் ஒ பி மாதிரியான படங்கள் தமிழ்த்திரையுலகின் சாபக்கேடு! என்பது தான் மறுக்கமுடியாத உண்மை!.மொத்தத்தில் டாஸ்மாக் கடைக்குள் போய் வந்த உணர்வைத் தருகிறது வி.எஸ்.ஓ.பி.
Rating 2/5.