‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ என பரபரப்பான படங்களை கொடுத்த விஜய்சேதுபதிக்கு சமீபத்திய படங்கள் சுமார் ரகம் தான். இந்நிலையில், ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்திய,இவரே தயாரித்து நடித்த ‘ஆரஞ்ச் மிட்டாயின் ‘சுவையை பார்ப்போம்.
சாலை வசதியே சரிவர இல்லாத கிராமம். அக்கிரமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கைலாசம் என்பவருக்கு திடீர் நெஞ்சு வலி! (சத்யா) ரமேஷ் திலக் மற்றும் (ஆறுபாலா) ஆறுமுகம் இருவரும் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈஎம்.டி.,,(எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னிசியன் ) ஆக வேலை செய்து வருகின்றனர். ரமேஷ் திலக் (காவ்யா)ஆஷ்ரிதாவுடன் காதல் கொள்கிறார். பெண் கேட்கும்போது ஆம்புலன்ஸ் பணியை விட சொல்கிறார் அஷ்ரிதாவின் தந்தை.இதனிடையில் சாலை வசதியே சரிவர இல்லாத கிராமம். அக்கிரமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கைலாசம் என்பவருக்கு திடீர் நெஞ்சு வலி!ஹார்ட் அட்டாக் நோயாளியான விஜய்சேதுபதி மருத்துவமனைக்கு ரமேஷ்திலக்கும் டிரைவர் ஆறுமுகமும் கொண்டு செல்கின்றனர். கிராமத்தின் வழியே போகும்போது ஆம்புலன்ஸ் டயர் பஞ்சர் ஆகிறது. அதன்பின் என்ன நடக்கிறது? விஜய்சேதுபதியை மருத்துவமனையில் சேர்த்தார்களா? அவரின் கதி என்ன? ரமேஷ் திலக்கின் காதல் கைகூடியதா?இல்லையா! என்பதே படத்தின் திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.ஹார்ட் அட்டாக் நோயாளியாக விஜய்சேதுபதி. எந்த நடிகரும் ஏற்கத் துணியாத கேரக்டர். பாராட்டுகள். நான் அதிகம் கிராம,நகர்ப்புறங்களில் அதிகம் பார்க்கும் தெனாவெட்டும், குசும்பும், நிறைந்த ஒரு நடுத்தர குடும்பத்து அறுபது வயதுக்காரரின் உணர்வுகளை அற்புதமாக பிரதிபலித்திருக்கிறார்சில சமயங்களில் கோபப்படுவதும்,சில சமயங்களில் ஜாலியாக இருப்பதும் என படத்தை நகர்த்த உதவியிருக்கிறார். ‘அடியே மனம் நில்லுனா நிக்கதடி…’ என்ற பாடலுக்கு விஜய் சேதுபதியின் ஆட்டம் செம… கலக்கல்.ரமேஷ் திலக் நல்ல தேர்வு!.காதலியிடமும் அவரது தந்தையிடமும் ‘கெத்தை’ விட்டுக் கொடுக்காமல் பேசுவது ரசிக்க வைக்கிறது.. தன் தந்தை வயது உடைய விஜய் சேதுபதியிடம் அவர் காட்டும் பாசம், பரிவு , கோபம் நன்றாகவே தன நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.கூடவே ஆறுமுகம் பாலா கிடைக்கிற கேப்பில் தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். ரமேஷ் திலக்கின் காதலியாக வரும் ஆஷ்ரிதா தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். தந்தையிடமும் காதலனிடமும் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.விஜய்சேதுபதியின் மகனாக கருணாகரன் மற்றும் ஆம்புலன்ஸ் சூப்பர் வைசருக்கு நட்புக்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார் பாபி சிம்ஹா. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான ‘பயணங்கள் தொடருதே…’ மற்றும் ‘தீராத ஆசைகள்…ஆகிய பாடல்கள் கேட்க நல்லா இருந்தாலும் திரையரங்கை விட்டு வெளியேறியதும் மறைந்து விடுகிறது. இயக்குனர் பிஜூ விஸ்வநாத். இவரே எடிட்டராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். வசனங்களை விஜய்சேதுபதியும், இயக்குனரும் எழுதியுள்ளனர்.நன்றாகவே உள்ளன ஆனால் கதையின் நாயகன் குறித்து அழுத்தமான காரங்களை கூறாததால் அலுப்பே மிஞ்சுகிறது!.மொத்தத்தில் இனிப்பே இல்லாத ஆரஞ்சு மிட்டாய் !