குறுகிய காலத்தில் இந்திய திரை உலகில் மிகப்பெரிய வியப்புகுறி என்றால் அது கீர்த்தி சுரேஷ்தான்!
“இந்த சின்னப் பொண்ணா அப்படி நடிச்சிருக்கு “என்று கேட்காத திரை உலக பிரபலங்களே இல்லை. சின்ன நடிகையர் திலகமாகவே வாழ்ந்து விட்டார். படம் பார்க்கிறவர்களின் விழிகள் நனைந்து வெளியில் வருவது ஆனந்தமும் அவலமும் கலந்துதான்!
“இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரா சாவித்திரி “என்பது இன்றைய தலைமுறைகளின் கண்ணீர்.
“நடிகர் திலகத்துக்கு இணையாக நடித்த சாவித்திரியின் அப்படியே திரையில் பார்க்க முடிந்ததே” என்ற மகிழ்ச்சி முந்தைய தலைமுறையின் மிச்சங்களுக்கு!
“சாவித்திரியாக நடித்தது பற்றி என்ன நினைக்கிறிங்க ?”-இது சின்ன சாவித்திரியம்மாவுக்கு!
“அவ்வளவு ஈசியாக இல்லை.ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அவருடைய திரை வாழ்க்கையும் ,நிஜ வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக இருந்தாலும் குறுகிய காலத்தில் முடிந்து விட்டது. குடும்பம்,நட்பு வட்டம் பற்றிய முக்கியத்துவம் பற்றி அவருடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த அம்மா வாழ்க்கையிலும் ,திரைத்துறையிலும் செய்த பல தவறுகளை ஒரு போதும் செய்ய மாட்டேன்.
இந்த படத்தை நான் ஒப்புக்கொண்ட போதே எந்த அளவுக்கு பேசப்படும் என்பதை அறிந்தே இருந்தேன். அந்த அளவுக்கு சாவித்திரியம்மாவின் வாழ்க்கை இருந்தது, அப்பப்பா ..பாராட்டுகளில் மூழ்கி திணறிக் கொண்டிருக்கிறேன் .என்று சொல்வதுதான் நிஜம்.
இனி சாமி 2, சண்டக்கோழி 2, தளபதி 62 என அடுத்தடுத்து படங்கள் வரப்போகின்றன.ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்””என்றார் கீர்த்தி சுரேஷ்.