மாலைப் பொழுது…
சித்திரை வெயிலின் உச்ச பட்ச தாக்குதல் சற்றே தணிந்த நிலையில் …
உணர்வாளருடன் உரையாடி வெகுநாட்கள் ஆயிற்றே என்கிற தாகத்துடன் தொலைபேசியை சுழற்ற…
எதிர்முனையில் இயக்குநர் இமயம் ” எப்படி இருக்கீங்க ?”
“நல்லா இருக்கேன் .நம்ம தமிழ்நாட்டின் எதிர்வரும் காலம் எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? அதைச்சொல்லுங்க.?” என்றேன் ‘சினிமா முரசம்’சார்பில்!
“தமிழ்நாட்டின் எதிர்காலம் மிகக்கேவலமாகி விடக்கூடாது என்பதில் இப்ப நாம்ப கவனமாக இல்லேன்னா எல்லாமே தப்பாகி விடும். என்ன செய்து விடமுடியும்னு நாம்ப விளையாட்டுத்தனமாக இருந்தா நாசம்தான்! ஆனால் தமிழக ஊடகங்கள் யார் ஆண்டா நமக்கென்ன ,நமக்கு தேவை பணம்தான் என்கிற நிலையில் செயல்படுவது கவலையாக இருக்கிறது. நச்சுச்செடியை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு இதுதான் பத்திரிக்கை தர்மம்னு சொல்றது தமிழுக்கு நல்லதல்ல .ஊடகங்கள் ஒன்று சேர்ந்து போராடவேண்டிய காலம் இது,!”
போகிற போக்கினைப் பார்த்தால் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேற்றம் அதிகமாகி தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் போலிருக்கே?”
“என்ன பண்ணச்சொல்றே? கோவை மற்றும் சுற்றுப்புறங்களில் ஆந்திரர்களின் முதலீடுதான் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு முப்பது பெர்சென்ட் தொகுதி வேணும்னு என்னிடமே ஒருத்தர் சொல்றார்..
காவிரி வரும்னு எதிர்பார்த்தால் வேற என்னமோ வருதேய்யா! கேவலமாக இருக்கு!”
“திராவிட ஆட்சிகளுக்கு இனி இடமில்லை ஆன்மீக அரசியல்தான் இனி தமிழ்நாட்டை ஆளப் போகுதுன்னு சொல்றாங்களே ,நதிகளை இணைப்போம்னு சொல்றாங்க. இது சாத்தியமா? ஒருத்தர் கால்வாய்களை முதலில் இணைப்போம்னு பிஜேபி சார்பில் சொல்றார். இதெல்லாம் சாத்தியப்படுமா?”
“ஆன்மீக அரசியல் வேணும்னா டெல்லிக்கு போய் அரசியல் பண்ணுங்க, டெல்லையில் சிஸ்டம் கேட்டுப்போய்த்தான் இருக்கு. அத சரி பண்ணு! இங்கு தமிழ்த்தேசியம்தான் ஆளும். நான் நெய்வேலியில் போராட்டம் நடத்துனபோது ஒட்டு மொத்த திரை உலகமும் நெய்வேலியில்தான்! நீ மட்டும் வரல. தனியா உண்ணாவிரதம்னு மறுநாள் மேடை போட்டே. இதுவரை நதி இணைப்புக்காக என்ன செய்தே, அதை சொல்லு முதலில்! ”
காட்டமான கேள்விதான்!